காதலில் தோற்றேன்
வெற்றி கிட்டும்
வெளிச்சம் நிச்சயம்
சுண்ணாம்பு வெளுக்கும்
பாலும் தெரியும்
இது என் காதல் நேரெண்ணங்கள்.
அழகை ரசித்த என் கண்கள்
அழவும் ரசிக்கக் கற்றது
அவள் செய்த மௌன மொழியால்.
சித்தர்கள் தவம் மௌனம்
மௌனப் பயன்
கடவுளை அடைதல்
காதல் தவப் பயன்
சித்திரவதைதான்
No comments:
Post a Comment